செய்திகள்
உத்தரகாண்டில் வரும் 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு முடிவு
உத்தரகாண்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 1,000 இடங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, உத்தரகாண்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய 1,000 இடங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால், வருகிற 17ந்தேதிக்குள் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்ற அரசின் இலக்கு எட்டப்படும். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை எதுவும் இல்லை. வருகிற டிசம்பருக்குள் 100 சதவீத தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...நீட் தேர்வு நிறைவடைந்தது: இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து