ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

முன்பதிவில் புது மைல்கல் கடந்த மஹிந்திரா தார்

Published On 2021-01-04 11:48 GMT   |   Update On 2021-01-04 11:48 GMT
2020 டிசம்பர் மாதத்தில் புதிய மஹிந்திரா தார் மாடல் முன்பதிவில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் மாடல் ஆப் ரோடு எஸ்யுவி 2020 அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகமானது. இந்தியாவில் புதிய தார் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

துவக்கம் முதலே புதிய மஹிந்திரா தார் முன்பதிவில் நல்ல வரேவேற்பை பெற்று வருகிறது. மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்த காரை வாங்க பல ஆயிரம் பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில், 2020 டிசம்பர் மாதத்தில் மட்டும் புதிய தார் மாடலை வாங்க 6500 முன்பதிவு செய்துள்ளனர்.



அதிக வரவேற்பு காரணமாக புதிய தார் மாடல் உற்பத்தியை மஹிந்திரா நிறுவனம் அதிகரிக்க இருக்கிறது. புதிய தார் விற்பனையில் 50 சதவீதம் யூனிட்கள் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் ஆகும்.

புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News