செய்திகள்
கைது

ஏர்வாடி அருகே செல்போனை பறித்து சென்ற வாலிபர் கைது

Published On 2021-09-02 10:24 GMT   |   Update On 2021-09-02 10:24 GMT
ஏர்வாடி அருகே செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

ஏர்வாடியை சேர்ந்த பீர்முகமது (33) என்பவரிடம் கடந்த மாதம் 7-ந் தேதி, குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி ஒருவர், திருக்குறுங்குடி செல்லும் ரோட்டில் அழைத்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், பீர்முகமது கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பீர்முகம்மது, ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கின் நம்பி தலைவன் பட்டயத்தை சேர்ந்த மகராஜன் என்ற கார்த்திக்கை (24) கைது செய்தார். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News