செய்திகள்
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் கோமுட்டி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது34). கஞ்சா வியாபாரி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
இந்த ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவ் பரிசீலனை செய்து சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் கோமுட்டி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது34). கஞ்சா வியாபாரி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார்.
இந்த ஆவணங்களை கலெக்டர் கோவிந்தராவ் பரிசீலனை செய்து சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.