உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் விபத்தில் பள்ளி மாணவர் பலி

Published On 2022-04-15 11:27 GMT   |   Update On 2022-04-15 11:27 GMT
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: 

கோவை கணபதி அருகே உள்ள கிருஷ்ணராஜ் காலனியை சேர்ந்தவர் சகாய அந்தோணி ராஜ். இவரது மகன் ஜெரோம் ரோசாரியோ (வயது 16). பள்ளி மாணவர். 

சம்பவத்தன்று இவர் தனது தந்தையின் மொபட்டில் அதே பகுதியை சேர்ந்த நண்பரான ஹிர்திக் (16) என்பவரை ஏற்றிக்கொண்டு சென்றார். மொபட் கோவை-திருச்சி ரோட்டில் ஒண்டிப்புதூர் ரெயில்வே மேம்பாலம் சென்ற போது மொபட்டை ஓட்டிச் சென்ற ஜெரோம் ரோசாரியோ அலட்சியமாகவும், வேகமாகவும் ஓட்டினார். 

அப்போது மொபட் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற அடையாளம் தெரியாத லாரியின் பின்னால் மோதியது. இதில் தலை மற்றும் மார்பில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெரோம் ரோசாரியோவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News