உள்ளூர் செய்திகள்
ஓசூர் பகுதியில் மழை: 2 மரங்கள் வேருடன் சாய்ந்தது
ஓசூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 2 பழமையான மரங்கள் சாய்ந்தன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் , ராயக்கோட்டை ரோடு ஹட்கோ குடியிருப்பு பகுதியில் 2 பழமையான மரங்கள், நேற்று வேருடன் சாய்ந்து விழுந்தன.
இதனை மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.