செய்திகள்
தற்கொலை

காதலன் விபத்தில் இறந்த துக்கத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-04-09 07:08 GMT   |   Update On 2021-04-09 07:08 GMT
பொள்ளாச்சி அருகே காதலன் விபத்தில் இறந்த துக்கத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பார்த்தினி (வயது 19). இவர் அந்த பகுதியில் எள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

பார்த்தினி கடந்த ஒரு வருடமாக உடுமலையை சேர்ந்த ரமேஷ் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி நடந்த விபத்தில் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். காதலன் இறந்ததால் பார்த்தினி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வி‌ஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கதினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பார்த்தினி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News