செய்திகள்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னர்

Published On 2021-08-23 02:57 GMT   |   Update On 2021-08-23 02:57 GMT
புதுச்சேரியில் டுவிட்டர் மூலம் உதவி கேட்ட பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு குவிந்து வருகிறது.
புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். எனவே அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது சென்னையில் உள்ளார்.

இந்த நிலையில் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை தேவைப்பட்டது. எனவே அந்த பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து டுவிட்டர் மூலம் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை பார்த்த அவர் சுகாதாரத்துறை செயலாளர் அருணை தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் அருண் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

தற்போது அந்த பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பெண்ணுக்கு வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்த கவர்னருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Tags:    

Similar News