ஆன்மிகம்
திருப்பதி

கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Published On 2021-02-08 08:04 GMT   |   Update On 2021-02-08 08:04 GMT
கொரோனா தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் முதல் முறையாக 51,796 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,165 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
திருப்பதி :

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் முதலில் 3 ஆயிரம் பக்தர்களுடன் திருப்பதியில் தரிசனம் தொடங்கப்பட்டது. பின்னர் படிபடியாக தரிசனம் செய்ய பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

திருப்பதியில் தற்போது தினசரி ரூ.300 கட்டணத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்கள், வி.ஐ.பி. தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் வி.ஐ.பி. பிரேக் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் என தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த நாட்களில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தான் தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

நேற்று முன்தினம் முதல் முறையாக 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் 50,200 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,621 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். 3.11 கோடி உண்டியல் வசூலானது.

நேற்று 51,796 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23,165 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.80 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News