செய்திகள்
பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் சுற்றுப்பயணம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ஜலந்தரில் உள்ள தேவி தலாப் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சந்தா கூறும்போது, அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 3 மணிக்கு அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர் மாலை ஜலந்தரில் உள்ள தேவி தலாப் கோவிலில் தரிசனம் செய்கிறார். நவராத்திரி திருவிழா நடந்து வரும் வேளையில் அமைதி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் பஞ்சாப்பின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார் என்றார்.
கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சந்தா கூறும்போது, அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 3 மணிக்கு அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர் மாலை ஜலந்தரில் உள்ள தேவி தலாப் கோவிலில் தரிசனம் செய்கிறார். நவராத்திரி திருவிழா நடந்து வரும் வேளையில் அமைதி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் பஞ்சாப்பின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார் என்றார்.
கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.