செய்திகள்
பல்லடம் அருகே பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் கொள்ளை
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது65). இவரது மனைவி சம்பூர்ணம் (60). இருவரும் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வீட்டைப்பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.