செய்திகள்
முகப்பேரில் காரில் கஞ்சா கடத்திய 4 கல்லூரி மாணவர்கள் கைது
முகப்பேரில் காரில் கஞ்சா கடத்திய 4 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர்:
முகப்பேர் மேற்கு பகுதியில் சிலர் காரில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நொளம்பூர் போலீசார் அங்கு சென்று காரை மடக்கினார்கள். காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் இருந்த 4 வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். எனவே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர்.
இதில், அந்த காரில் இருந்த 3½ கிலோ கஞ்சா சிக்கியது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களில் அப்துல்ரசாக், முகமது சித்திக், சதீஷ்குமார் ஆகியோர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், முகமது அன்சாரி என்பவர் டிப்ளமோ மாணவர்.
4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கே கிடைத்தது, யாருடன் தொடர்பு என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
முகப்பேர் மேற்கு பகுதியில் சிலர் காரில் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நொளம்பூர் போலீசார் அங்கு சென்று காரை மடக்கினார்கள். காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் இருந்த 4 வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். எனவே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர்.
இதில், அந்த காரில் இருந்த 3½ கிலோ கஞ்சா சிக்கியது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்களில் அப்துல்ரசாக், முகமது சித்திக், சதீஷ்குமார் ஆகியோர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், முகமது அன்சாரி என்பவர் டிப்ளமோ மாணவர்.
4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கே கிடைத்தது, யாருடன் தொடர்பு என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.