வழிபாடு
முப்பந்தல் இசக்கியம்மன்

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் 8-ந்தேதி மலர் முழுக்கு விழா

Published On 2022-02-06 01:30 GMT   |   Update On 2022-02-05 04:51 GMT
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் மலர் முழுக்கு விழா வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் மலர் முழுக்கு விழா வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணி முதல் கும்பாபிஷேகமும், பின்னர் 11.30 மணிக்கு பஜனையும், மதியம் 1 மணிக்கு உச்ச கால பூஜையுடன் அம்மனுக்கு அலங்கார தீபாராதனை மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இரவு 7.30 மணி முதல் மலர் முழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. முன்னதாக 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாட்டை முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் சேவா சங்க நிறுவன தலைவர் கோலப்பன் மற்றும் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News