ஆன்மிகம்
நிலக்கோட்டை மாரியம்மன்

நோய்களுக்கு அருமருந்தாகும் நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் தீர்த்தம்

Published On 2021-04-01 07:10 GMT   |   Update On 2021-04-01 07:10 GMT
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடை காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய் தீர அம்மனை மனதார வேண்டிக் கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இதுபோல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News