செய்திகள்
கைது

தாரமங்கலம் அருகே குட்கா, மது விற்ற 5 பேர் கைது

Published On 2021-01-22 10:24 GMT   |   Update On 2021-01-22 10:24 GMT
தாரமங்கலம் அருகே குட்கா, மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:

தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அருணாசலம் புதூர் பகுதியை சேர்ந்த வீராசாமி (வயது 60), முனிய கவுண்டன் வளவு பகுதியை சேர்ந்த கோவிந்தன் (49) ஆகியோர் குட்கா விற்றதாகவும், காட்டுமேலூரை சேர்ந்த செல்வம் (48), கருக்கல்வாடியை சேர்ந்த ஆறுமுகம் (40), பாப்பம்பாடி கிருஷ்ணராஜ் (50) ஆகியோரை மதுவை பதுக்கி விற்றதாகவும் தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News