உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிறுமி கர்ப்பம்-போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2022-05-07 09:57 GMT   |   Update On 2022-05-07 09:57 GMT
அம்பை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கல்லிடைக்குறிச்சி:


அம்பையை அடுத்த ஊர்க்காடு வடக்கு கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது உறவினர் ஒருவரின் 16 வயது மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். 

பின்னர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதேபோல் 2 பேரும் அடிக்கடி தனிமையாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகினார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளர். 

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளது தெரியவந்தது. இதனை அறிந்த பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியது மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News