உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் வாகனம் மோதி ஒருவர் பலி
விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கு நிற்காமல் சென்று விட்டது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு வித்யாலயம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றி திரிந்து வந்தார். அவர் பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு அவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கு நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.