உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்கு 3-ம் பருவ பாட புத்தகங்கள் வருகை

Published On 2022-01-05 10:30 GMT   |   Update On 2022-01-05 10:30 GMT
திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிற 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3--ம் பருவ பாடபுத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த புத்தகங்கள் பள்ளிகள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேற்று கொண்டுவரப்பட்டன. திருப்பூர் மாநகரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் இறக்கிவைக்கப்பட்டன. இந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு  பிரித்து வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News