செய்திகள்
கோப்பு படம்

பொள்ளாச்சி கோட்டூர் அருகே 2½ வயது ஆண்குழந்தை வாய்க்காலில் மூழ்கி பலி

Published On 2020-01-13 12:14 GMT   |   Update On 2020-01-13 12:14 GMT
பொள்ளாச்சி கோட்டூர் அருகே வாய்க்காலில் மூழ்கி 2½ வயது ஆண்குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அவல்சின்னம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமாரா வடிவேல் (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி சித்ராதேவி (வயது 42). இவர்களது 2½ வயது மகன் ஹர்‌ஷவர்தன்.

சம்பவத்தன்று சித்ராதேவி தனது மகனை அழைத்துக்கொண்டு கோட்டூர் பொங்காளியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன் ஹர்‌ஷவர்தன் அவர்களது வீட்டில் இருந்த கோழிகளை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் வீட்டின் முன் விளையாடிய ஹர்‌ஷவர்தனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ராதேவி அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.

அப்போது அருகில் இருந்த வாய்க்காலை எட்டிப் பார்த்த போது ஹர்‌ஷவர்தன் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சித்ராதேவி உடனடியாக மகனை மீட்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு சித்ராதேவி கதறி அழுதார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News