செய்திகள்
புகழேந்தியை நினைத்தால் 24ம் புலிகேசி நினைவுக்கு வருகிறது - டிடிவி தினகரன்
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன், புகழேந்தியை நினைத்தால் 24-ம் புலிகேசி நினைவுக்கு வருகிறது என கிண்டல் செய்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது குறித்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தினகரன், கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் இருக்கிறாரா? அ.ம.மு.க.வில் இருக்கிறாரா? என கூறவேண்டும்.
சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார். அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.