செய்திகள்
கோப்புப் படம்

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு

Published On 2019-08-31 10:12 GMT   |   Update On 2019-08-31 10:12 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முசாபர்நகர்:

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜன்சத் நகரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த் சர்மா. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவரது மருமகள் நேற்று அளித்த புகாரின் பேரில் அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் மகேஷ் சந்த் சர்மா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தனது மகனுக்கும் தனக்கும் இடையே சொத்து தகராறு உள்ளதாகவும்,  அதன் காரணமாக தன்னை தவறாக சித்தரிக்க இவ்வாறு குற்றம்சாட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News