செய்திகள்
சாலை விபத்து

லாரி - மோட்டார் சைக்கிள் மோதல் - தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2019-09-14 18:22 GMT   |   Update On 2019-09-14 18:22 GMT
லாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்
தூத்துக்குடி:

தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்தவர் ராஜ் மகன் ஜேசுவடியான் (வயது 37). இவருடைய மனைவி மரிய அந்தோணி சவரியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஜேசுவடியான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த பாக்கியராஜ் (34) என்பவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக் கிளை ஜேசுவடியான் ஓட்டினார். தூத்துக்குடி- நெல்லை சாலையை சிதம்பரநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கடக்க முயன்றபோது, தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜேசுவடியான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாக்கியராஜ் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான எட்டயபுரத்தை சேர்ந்த ஆறுமுகசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News