செய்திகள்
கைது

விதவைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2021-11-20 10:54 GMT   |   Update On 2021-11-20 10:54 GMT
குளச்சல் அருகே வாட்ஸ்-அப் மூலம் விதவைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மாதம் அடையாளம் தெரியாத ஒருவர் தனது செல்போன் மூலம் ஆபாச படங்களையும், ஆபாச வாசகங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் அந்த பெண்ணுக்கு இன்னொரு செல்போன் எண்ணில் இருந்தும் தொடர்ந்து இதேபோல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனை சந்தித்து புகார் கொடுத்தார்.

அந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரீத்தாபுரம் ஈத்தம்பாடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27) என்ற வாலிபர்தான், 2 செல்போன் எண்கள் மூலம் விதவை பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. சதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, தற்போது கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனீப் ஆகியோர் சதீஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே இந்த விதவை பெண்ணிடம் தவறாக பேசியது தொடர்பாக குளச்சல் போலீசாரால் கண்டிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News