செய்திகள்
தற்கொலை

அம்மூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-19 12:47 GMT   |   Update On 2020-11-19 12:47 GMT
தனிக்குடித்தனம் நடத்த மனைவி வராததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 27). இவர், சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி மோகனப்பிரியா (21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

இந்த நிலையில் மோகன் தனது மனைவியை தனிக்குடித்தனம் நடத்த அழைத்துள்ளார். அதற்கு மோகனப்பிரியா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த மோகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News