செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. நகர செயலாளர் மரணம்: ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published On 2021-11-05 10:53 GMT   |   Update On 2021-11-05 10:53 GMT
திருவேற்காடு நகர கழக செயலாளர் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூவர் தெற்கு மாவட்டம் திருவேற்காடு நகர கழக செயலாளர் எஸ்.சத்தியநாராயணன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

அ.தி.மு.க. மீதும், தொடர்ந்து அ.தி.மு.க. தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு அ.தி.மு.க. பணிகளை ஆற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு சத்திய நாராயணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News