செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் நேரத்தில் தே.மு.தி.க. நிலைபாடு குறித்து அறிவிக்கப்படும்- பிரேமலதா

Published On 2021-10-22 09:11 GMT   |   Update On 2021-10-22 09:11 GMT
மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தி வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தொடர்ந்து விலை உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. நடுத்தர, ஏழை மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க., நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தி.மு.க. அரசும் தற்போது வரை நடுநிலையாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News