உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாகலூர் அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-01-13 10:08 GMT   |   Update On 2022-01-13 10:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த விவசாயி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா பாகலூர் பக்கமுள்ள அடவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லகுமய்யா என்பவரது மகன் முனிராஜ் (30).

விவசாயியான இவரும், அதே பகுதியை சேர்ந்த கோனப்பா என்பவரது மகன் மற்றொரு முனிராஜும் உறவினர்கள் ஆவர்.

இவரது மனைவி ஜோதிக்கும், லகுமய்யா மகன் முனிராஜிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை பலமுறை கண்டித்தும் கைவிட மறுத்து கள்ளத்தொடர்பு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த முனிராஜ், நேற்று லகுமய்யா மகன் முனிராஜை அரிவாளால் வெட்டினார்.

இதில் அவரது தலையின் பின்புறம் வெட்டு விழுந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News