செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபர்
கொளத்தூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் 6-வது தெருவில் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக ராஜமங்கலம் போலீசுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை பிடித்து விசாரணைக்காக வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
திடீரென ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகனை தாக்கி தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை மற்ற போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் 6-வது தெருவில் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக ராஜமங்கலம் போலீசுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை பிடித்து விசாரணைக்காக வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
திடீரென ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகனை தாக்கி தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை மற்ற போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.