செய்திகள்

ஜீயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2018-11-09 13:50 GMT   |   Update On 2018-11-09 13:50 GMT
ஜீயபுரத்தில் மோட்டார் சுவிட்சை போட்ட வாலிபர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திருப்பராய்த்துறை அணலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாவி. இவரது மகன் சிதம்பரம் (வயது 35) இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி வருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் உள்ள மோட்டார் சுவிட்சை போட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரது மனைவி மற்றும் அருகில் இருந்தவர்கள் சிதம்பரத்தை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சிதம்பரம் இறந்து விட்டார். 

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News