செய்திகள்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சந்தித்து, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும்,தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 17 லட்சம் வந்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி வருகிறது.
தனியார் மருத்துவமனைகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்த முடியும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சந்தித்து, தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும்,தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 17 லட்சம் வந்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி வருகிறது.
தனியார் மருத்துவமனைகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்த முடியும்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் கூறும்போது, ‘மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொண்டதில், 12 நபர்களுக்கு மட்டுமே நேற்று தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது’ என்றார்.
இதையும் படியுங்கள்... தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுகிறதா?- ஐசிஎம்ஆர் முக்கிய தகவல்