செய்திகள்
கொள்ளை

திருமங்கலத்தில் லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-09-26 11:27 GMT   |   Update On 2019-09-26 11:27 GMT
திருமங்கலத்தில் லாரி டிரைவர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருமங்கலம்:

திருமங்கலம் பசும்பொன் தெரு சுந்தரக்கொத்தன் சந்து பகுதியில் வசிப்பவர் அழகர்பாண்டி, லாரி டிரைவர். இவர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மனைவி மகாலட்சுமி (வயது30) வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டிற்கு சென்றார்.

இதனை அறிந்த யாரோ மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். இன்று காலை கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மகாலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த 2 பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.800 திருட்டு போய் இருப்பதாக மகாலட்சுமி தெரிவித்தார்.

கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News