உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மகனுக்கு திருமணம் ஆகாததால் தந்தை தற்கொலை

Published On 2022-01-13 07:53 GMT   |   Update On 2022-01-13 07:53 GMT
ஜோலார்பேட்டை அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு நடு முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசூன் (வயது55). இவரது மகன் ரபிக் (வயது30) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே எனும் மன விரக்தியில் இருந்துள்ளார். 

நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தனது மனைவியின் புடவையால் பைசூன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து இவரது அண்ணன் கவுஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News