செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2019-09-17 06:43 GMT   |   Update On 2019-09-17 06:43 GMT
திருவள்ளூர் அருகே தனியார் விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 18). இவர் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உட்கோட்டையில் தனியார் விடுதியில் தங்கி கிண்டியில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விடுதி அறையில் சசிக்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News