செய்திகள்
சல்மான் பட்

இங்கிலாந்து இன்சூரன்ஸ் பணத்தை பற்றியே கவலைப்படுகிறது: சல்மான் பட் விமர்சனம்

Published On 2021-09-13 13:52 GMT   |   Update On 2021-09-13 13:52 GMT
தொடரை 2-2 என சமன் செய்யவோ அல்லது சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெறவோ விரும்பவில்லை என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் விளையாட விரும்பவில்லை. ஐ.பி.எல். போட்டியால்தான் பி.சி.சி.ஐ. ரத்து செய்ய விரும்பியது என விமர்சனம் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இங்கிலாந்து மீது விமர்சனம் செய்துள்ளார். அவர் ஐந்தாவது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது குறித்து கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி தொடரை 2-2 என சமன் செய்யவோ அல்லது சாம்பியன்ஷிப் புள்ளிகளை பெறவோ விரும்பவில்லை. போட்டி குறித்து கூட பேச விரும்பவில்லை. இங்கிலாந்து இன்சூரன்ஸ் பணத்தை (40 மில்லியன் பவுண்டு இழப்பு) பற்றிதான் கவலைப்படுகிறது’’ என்றார்.
Tags:    

Similar News