ஆன்மிகம்
பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2021-01-02 06:06 GMT   |   Update On 2021-01-02 06:06 GMT
புதுச்சேரி -திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
புதுச்சேரி -திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மொரட்டாண்டியில் உள்ள காளி கோவிலிலும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. வானூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பேராவூர் பேசும் பெருமாள் கோவில், வானூர் சிவன் கோவில், திருச்சிற்றம்பலம் கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
Tags:    

Similar News