செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் எந்திரகோளாறு: 13 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதம்
சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்ள் பழுதானது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அந்த வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். 20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த எந்திரம் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதேபோல் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் தொகுதிகளுக்குட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் பழுதானது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது.