செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-09-20 13:46 GMT   |   Update On 2021-09-20 13:46 GMT
திருவள்ளூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் ரஜாஜிபுரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சடகோபன். இவரது மகன் லோகேஷ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News