செய்திகள்
தமிழக அரசு

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2021-01-19 04:01 GMT   |   Update On 2021-01-19 04:01 GMT
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 எனும் புதிய கொள்கையை 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது முக்கிய நோக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2021-ம் ஆண்டு புதிதாக தொழில் தொடங்கும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் மானியத்தை பெற வருகிற 25-ந் தேதிக்குள் http://startuptn.in/forms/tanseed/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News