செய்திகள்
கோப்பு படம்

பாண்டிகோவில் அருகே காதலை ஏற்காத பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு

Published On 2019-12-15 13:21 GMT   |   Update On 2019-12-15 13:21 GMT
காதலை ஏற்க மறுத்த பெண்ணை தாக்கி செல்போனை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த 21 வயது இளம்பெண், பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரை, திருமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதுபற்றி இளம்பெண்ணிடம் கூறிய போது, அவர் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், இளம்பெண்ணை தாக்கி செல்போனை பறித்ததாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News