செய்திகள்
விபத்து பலி

வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி

Published On 2021-10-22 09:44 GMT   |   Update On 2021-10-22 09:44 GMT
வேலகவுண்டம்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் அருகே உள்ள போதுபட்டி காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 30), பெயிண்டர். இவர் கடந்த 16-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே இளநகர் பகுதியில் சென்றபோது திடீரென நாய் ஒன்று குறுக்கே விழுந்தது.

அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதால் தவறி விழுந்து படுகாயமடைந்த பிரகாசை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News