செய்திகள்
புதுவை அருகே தனியார் நிறுவன காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பை சேர்ந்தவர் ரிஷார் ராஜேஷ் (வயது 35). இன்னும் திருமணமாகவில்லை. தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோயும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் தனது காலில் காயமடைந்த புண் ஆறாத நிலையில் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதனால் வெறுப்படைந்த ராஜேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.