செய்திகள்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி டுவிட்
தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநில நலனுக்காகவும், தமிழ் பண்பாட்டை பறைசாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். கடினமாக உழைத்த தொண்டர்களை பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநில நலனுக்காகவும், தமிழ் பண்பாட்டை பறைசாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். கடினமாக உழைத்த தொண்டர்களை பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.