செய்திகள்
கைது

மதுரையில் பட்டாசு வெடித்ததாக 4 பேர் கைது

Published On 2019-10-28 11:43 GMT   |   Update On 2019-10-28 11:43 GMT
மதுரையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

காற்று மாசு படுவதை கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் இதனை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

இந்த நிலையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக செல்லூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த் (வயது 40), பாலமுருகன் (40) ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானப்பிரபாகரன், தியாகபிரியன் ஆகியோர் கைது செய்தனர்.

இதே போல் கரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, காசிமாயன் ஆகியோர் ரோந்து சென்றபோது, ராஜேந்திரா மெயின் ரோட்டைச் சேர்ந்த சத்திய மூர்த்தி, மேலப் பொன்னகரத்தைச் சேர்ந்த நாகராஜன் (38) ஆகியோரும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை நகரில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News