செய்திகள்
கோப்புப்படம்

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் கார் மோதி பலி

Published On 2021-02-22 18:11 GMT   |   Update On 2021-02-22 18:11 GMT
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
திருச்சி:

திருச்சி கே.கே.நகர் ரங்கா நகரை சேர்ந்தவர் ஜமால் மொஹிதீன் (வயது 67). ஓய்வு பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வரான இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக வாழவந்தான் கோட்டைக்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது மன்னார்புரம் பாலத்தில் வந்த போது பின்னால் வந்த கார் ஜமால் மொஹிதீன் மீது மோதியது, இதில் படுகாயம் அடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்தில், திருச்சி தாரநல்லூர் அழகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நளினா (வயது 65) சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

இதுபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி ஸ்ரீரங்கம் சங்கரன்பிள்ளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரம்யா (24) நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Tags:    

Similar News