செய்திகள்
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
தொண்டாமுத்தூரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டிங் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் ஆலாந்துறையில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு சிறுமி வேலைக்கு சென்று வந்தார். சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான கார்த்தி(21) என்பவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேலைக்கு சென்ற சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி சிறுமியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கார்த்தி சிறுமியுடன் பன்னிமடை பகுதியில் இருப்பதாக தகவல் வரவே போலீசார், அங்கு சென்று சிறுமியையும், கார்த்தியையும் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, கார்த்தி சிறுமியை கடத்தி சென்று பன்னிமடையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் ஆலாந்துறையில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு சிறுமி வேலைக்கு சென்று வந்தார். சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான கார்த்தி(21) என்பவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேலைக்கு சென்ற சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறினர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்தி சிறுமியை கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கார்த்தி சிறுமியுடன் பன்னிமடை பகுதியில் இருப்பதாக தகவல் வரவே போலீசார், அங்கு சென்று சிறுமியையும், கார்த்தியையும் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, கார்த்தி சிறுமியை கடத்தி சென்று பன்னிமடையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.