செய்திகள்
பலியான ஆடுகள்.

வெள்ளகோவிலில் இடி தாக்கி 35 ஆடுகள் சாவு

Published On 2021-10-22 08:20 GMT   |   Update On 2021-10-22 08:20 GMT
நேற்று இரவு அப்பகுதியில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம், கொளிஞ்சி காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசமூர்த்தி (வயது 56). இவர் தனது தென்னை மர தோப்பிற்குள் செம்மறி ஆடுகளை பட்டி போட்டு வளர்த்து வந்தார்.  

நேற்று இரவு அப்பகுதியில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது  அங்குள்ள தென்னை மரம் மற்றும் செம்மறி ஆடுகளை இடி தாக்கியது. இதில் 35 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. 

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News