செய்திகள்
மின்வேலியில் சிக்கி பலியான பெண் யானை.

தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி பெண் யானை பலி

Published On 2020-01-16 17:05 GMT   |   Update On 2020-01-16 17:05 GMT
தாளவாடி அருகே தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பெண் யானை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட தாளவாடி அருகே உள்ள திகனாரை வனகரம் மதத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் தென்னை மரக்கன்றுகள் நட்டு உள்ளார். வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டு யானை வந்து சேதம் ஏற்படுத்தாமல் இருக்க தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த ஒரு பெண் யானை அந்த தோட்டத்து பக்கம் வந்தது. அந்தப் பெண் யானை தோட்டத்தில் போக முயன்ற போது மின்வேலியில் சிக்கியது. இதில் அந்த யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானாது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த சீரகள்ளி வனத்துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News