செய்திகள்
விபத்து

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மின் வாரிய அதிகாரி பலி

Published On 2020-11-01 06:31 GMT   |   Update On 2020-11-01 06:31 GMT
பொங்கலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின் வாரிய அதிகாரி பலியானார்.
பொங்கலூர்:

பொங்கலூர் நாராயணநாயக்கன்புதூர் அருகே உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் சிவன்மலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை காங்கேயத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவினாசிபாளையம், சுங்கம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியின் பின்பகுதியில் ராஜேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்தார்.

இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து அவினாசிபாளையம் போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News