செய்திகள்
கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-28 12:38 GMT   |   Update On 2020-11-28 12:38 GMT
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் வடக்கு போலீசார், ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 35), கார்த்திகேயன் (32) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News