செய்திகள்
தற்கொலை

கோவை அருகே அடிதடி வழக்கில் மகன் சிறைக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-12 14:55 GMT   |   Update On 2021-11-12 14:55 GMT
கோவை அருகே அடிதடி வழக்கில் மகன் சிறைக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கட்டிட தொழிலாளி.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது மகன் சந்தோஷ் அந்த பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனால் முருகேசன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News